என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நாகர்கோவில் தற்கொலை
நீங்கள் தேடியது "நாகர்கோவில் தற்கொலை"
தக்கலையில் நண்பர் அறையில் சலவை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அழகேந்திரன் (வயது 43). சலவைத்தொழிலாளி.
இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலைக்கு வந்தார். அங்குள்ள கோனார் தெருவில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அழகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அதிக பணம் செலவாகியது.
இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி கவலைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அழகேந்திரனை தேடினார்கள். அவர் தக்கலை பேலஸ் ரோட்டில் உள்ள அழகேந்திரனின் நண்பனிடம் சென்று விசாரிக்க சென்றனர். அப்போது அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அழகேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் அஜய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அழகேந்திரன் (வயது 43). சலவைத்தொழிலாளி.
இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலைக்கு வந்தார். அங்குள்ள கோனார் தெருவில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அழகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அதிக பணம் செலவாகியது.
இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி கவலைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அழகேந்திரனை தேடினார்கள். அவர் தக்கலை பேலஸ் ரோட்டில் உள்ள அழகேந்திரனின் நண்பனிடம் சென்று விசாரிக்க சென்றனர். அப்போது அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அழகேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் அஜய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நாகர்கோவில் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் தாணு. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள். ஒரு மகன் உள்ளனர்.
இளைய மகள் லெட்சுமி நாராயணி (வயது 19) நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் படித்து வந்தார். இவரது தாயார் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். லெட்சுமி நாராயணி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்தார். அங்கிருந்து வீட்டிற்கு சாப்பிட்டு விட்டு வருவதாக கூறிவிட்டு வந்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் சாப்பிட்டுவிட்டு பாட்டி வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை.
இந்த நிலையில் வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பினர். வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. வீட்டின் கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் லெட்சுமி நாராயணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் தாணு. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள். ஒரு மகன் உள்ளனர்.
இளைய மகள் லெட்சுமி நாராயணி (வயது 19) நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் படித்து வந்தார். இவரது தாயார் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். லெட்சுமி நாராயணி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்தார். அங்கிருந்து வீட்டிற்கு சாப்பிட்டு விட்டு வருவதாக கூறிவிட்டு வந்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் சாப்பிட்டுவிட்டு பாட்டி வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை.
இந்த நிலையில் வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பினர். வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. வீட்டின் கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் லெட்சுமி நாராயணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X